Friday, October 12, 2007

பயணத்தின் தொடக்கம்

"உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்" - மகாகவி பாரதியார்

வழிப்போக்கனின் அன்பு வணக்கங்கள். வெகு நாட்களாய் பிரசவித்து, இன்று பிறந்திருக்கும் அழகுக் குழந்தையாய், என் இனிய அனுபவமாய் நிற்கும் இந்த பக்கங்களோடு நீங்கள் பயணம் செய்வதில், அதிகம் மகிழ்கிறேன்.

யார் இந்த வழிப்போக்கன்?? தான் போகிற போக்கில் சிந்தனைகளைச் சிதறவிடுபவனா...அல்லது தன் பயணத்தின் சுவாரசியத்தில் சிந்திப்பதைத் தவிர்ப்பவனா...காலத்தின் புதை நிலத்தில் இலக்கணங்களைப் புதைத்து விட்டு, மிஞ்சியிருக்கும் மனிதத்தை மட்டுமே நம்பி நகரும் பயணி அவன். இமை மூடும் நேரம் தவிர்த்து, கண்களில் ஆச்சரியக் கதிரோடு உலகம் நோக்கும் குழந்தை அவன். நொடி தவறாது, வாழ்க்கையைக் காதலிக்கும் உறுதியோடு இருப்பவன். யார் அவன், எனக்கு நெருக்கமானவனா? எங்கோ பார்த்து நினைவில் நிற்பவனா? நிச்சயமாக இல்லை..என்னில் நிரம்பியது போல், உங்களுக்குள்ளும் நிரம்பியவன். என்றோ உங்கள் கனவுகளில் வந்து, யதார்த்தங்களோடு கண்ணாமூச்சி ஆடியவன்.

என் அன்பு நினைவுகளுக்கு, எழுத்துகள் என பெயரிட்டு இங்கு நிரப்புகிறேன். நம் இனிய வழிப்போக்கனோடு பயணிக்கத் தொடங்குகிறேன்.

தமிழுக்குக் கோடி நன்றிகள் !!

அன்புடன்
உங்களில் ஒருவன்

2 comments:

Karthikeyan N R said...

Prasavikkum kuzhadhai valarndhu magizhum azhagai kana kaathirukkum anban...

Unknown said...

Payanam Inidhe thodara Vaazhthugal.Amuthagiya Tamizh Ulagamellam paravavendum endra Bharathiyin Kanavu Nanavavadhu kandu Magizhchi !!

Vaazhga Valamudan !!