Sunday, November 8, 2009

அழுத்தமான அடையாளங்கள்























எவரோ இரவலாய் கொடுத்தப் பார்வையில்
உலகைப் பார்த்துப் பழகியவன் நான்...

என் கண்களைச் சற்றே அதிகமாய் கசக்கி
என் புரிதல்களைப் பொருத்திட முயல்கிறேன்...

என் அடையாளம் தொலைவதாய்
உணர்ந்திடும் வேளையில் எல்லாம்,
புதிய புரிதல்களுக்காய் விரிகிறேன் நான்...

என் போராட்டம், சிறகுகளுக்காய் அல்ல!
நிலையான வானத்திற்காய்!!

சட்டென கரைந்து உரு தொலைக்கும் மேகமாய்
என் அடையாளம்
மாறியபடியே இருக்கிறது!

என் இருத்தலை நிலை நிறுத்துவதற்காய்
நொடிதோறும் நான்
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்!!

உண்மையில்,
என்னைப் பார்த்து மட்டுமே நான் அஞ்சுகிறேன்!
காரணம்,
என் ஒவ்வொரு நொடி மாற்றத்தின் முடிவில்,
இதுவரை இருந்த நான் இல்லாமலாகிறேன்!!

நினைவுகளின் விசித்திரக் கருணையால்,
எவ்ரேனும் என் நேற்றைய
அடையாளத்தை என்னோடுப் பகிர்ந்திடும் நொடியில்,
எனக்கு நானே அந்நியமாய் தெரிகிறேன்...





















நிலையின்மையின் அபாயம் உணர்ந்தே
எனக்கான கடவுள் ஒன்றினை உருவாக்கி,
என்னோடு நடத்திச் செல்கிறேன்!

என் முயற்சிகளை
முறியடிக்கும் வண்ணமாய்,
என் கடவுளும், என் புரிதல்களுக்கு ஏற்றாற்போல்
மாறியபடியே இருக்கிறான்!!

புதிய அடையாளங்களும்
புதிய கடவுள்களும் சேர்த்தபடி,
காத்துக் கொண்டிருக்கிறேன், இவ்வுலகில்
என் இருத்தலை நிலைநிறுத்த...

முன்னொரு நாளில்,
என்னோடு விளையாடி மகிழ்ந்த
பழைய விளையாட்டுப் பொம்மையொன்று
மீண்டும் ஒரு சிறுவனுக்காய்
ஏங்கியபடியே காத்திருக்கிறது...

7 comments:

Anonymous said...

nice to see something different..but would like to see some English also in there for others !

Lakshmanan Kasi Narayanan said...

JT......

This is really a Heart Touching Poet...... The special is the language which has expressed your full feelings.......

Unnakullum oru Kannadhasan hide aagiirukkar da.......

Unknown said...

Good one :) and considering that u took just 15 minutes to pen this down, it is really awesome :)

Naveen said...

Jay,

It is high time you change your profession to tamil poetry.

Keep it up !!! Vazhthukkal !!!

Regards,
Naveen

V said...

அடையாளங்களை பற்றி ஆழமாய் உன்னிப்பாக விவரித்திருப்பது மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!

Really well written! Liked the lines on changing and expanding perspectives :)

And the pictures add to the feel, really well!

Unknown said...

என்னுடைய மன ப்ரதிபலிப்பை உன் வாசகங்களில் கண்டேன்! Reflective poetry குறித்து நீ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது! மிக்க மகிழ்ச்சி!

Unknown said...

is this in Malialim? I wish I could read it..haha